ஆதார் எண் இணைப்பு – மம்தா பானர்ஜிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

0
817

மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து மாநில அரசு வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது. கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் மாநில அரசு எப்படி வழக்கு தொடர முடியும் என்றும் கேள்வி எழுப்பியது. மாநில அரசின் சார்பில் வழக்கு தொடராமல் முதல்-மந்திரி என்ற வகையிலோ அல்லது தனி நபர் என்ற வகையிலோ மம்தா பானர்ஜி வழக்கு தொடரலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கியது. இதனால் தனது பெயரில் மம்தா வழக்கை தொடர்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ராகவ் என்பவர் தாக்கல் செய்த மற்றொரு வழக்கில் மத்திய அரசு 4 வாரத்துக்குள் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here