புளூவேல் விளையாட்டால் மிரட்டப்பட்டவர்களுக்கு உதவி செய்ய காவல் துறையினர் நியமிப்பு

0
1351

புளூவேல் விளையாட் டில் முகம் தெரியாத நபர் தான் நமக்கு கட்டளை இடுகிறான். முகத்தை காட்டாதவன் நிச்சயம் கெட்ட எண்ணம் கொண்டவனாக இருப்பான். அவன் கொடுக்கும் கட்டளைகளால் நம்மை அறியாமலேயே உயர மான இடம், தண்டவாளம், சுடுகாடு போன்ற இடங்களுக்கு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட நேரிடும். இறுதியில் நம்மை மரணத்துக்கு ஆட்படுத் துகிறான்.

எனவே முகம் தெரியாத நபர்கள் கூறுவதை மாணவர்கள் கேட்க வேண்டாம். யாரோ ஒருவன் நம்மை ஆட்டுவிக்க நாம் அனுமதிக்கக்கூடாது. ஆன் டிராய்டு போனில் மாணவர்கள் நல்ல விஷயத்தை பார்த்தால் அனைவரது முன் வெளிப்படை யாக செயல்படுவர். ஆனால் ஆன்டிராய்டு செல்போனை தூக்கிக்கொண்டு தனியாகவோ, மறைவான இடத்துக்கோ சென் றால் அவர்கள் நீலதிமிங்கல விளையாட்டு அல்லது அது போன்ற ஏதோ ஒரு தவறான வழியில் செல்கின்றனர் என் பதே பொருள். எனவே அது போன்ற செயல்களில் குழந்தை கள் ஈடுபட்டால் அதை பெற் றோர் கண்காணிக்க வேண்டும்.

இதே போல் பள்ளியிலும், தனிமைப்பட்டாலோ அல்லது பள்ளி நேரத்தில் பாதியில் ஏதா வது ஒரு பொய்யான கார ணத்தை கூறி விடுப்பு எடுத்துச் சென்றாலோ, அவர்களை ஆசிரி யர்கள் கண்காணிக்க வேண் டும். பெற்றோரையும் அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் கண்காணிப்பது என்பது இயலாது. எனவே தனிமைப்பட்டு செல்லும் மாணவர் குறித்து ஆசிரியரிடம் சக மாணவர்கள் தகவல் அளிக்க வேண்டும்.

புளூவேல் விளையாட் டுக்கு ஆட்பட்டவர்களின் ரகசி யங்களை முகநூல், வாட்ஸ்-அப் மூலம் வெளியில் விட்டு விடுவதாக முகம் தெரியாத நபர்கள் மிரட்டலாம். அவ் வாறு வெளியிட்டால் அவர்கள் யார் என்பது அடையாளம் தெரிந்து விடும் என்பதால் அது சாத்தியமில்லை. எனவே அது போன்ற மிரட்டல்களுக்கு மாணவர்கள் அஞ்சத்தேவை இல்லை. நாம் துணிவுடன் இருந்தால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறு யாராவது மிரட்டினால் செல்போன் எண் 9444114125 அல்லது 8300071100 என்ற செல்போன் எண்ணிலோ புகார் செய்யலாம். அவ்வாறு புகார் செய்பவர்களுக்கு அதற்கு உரிய பதில் அளித்து உதவி செய்ய 24 மணிநேரமும் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here